டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

ஆயுஷ்மான் பாரத் யோஜனா பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டு மக்களுக்கு இலவச சுகாதாரத்தை உறுதி செய்தாலும், அவர்களில் எத்தனை பேருக்கு சரியான மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன? வாழ்க்கை முறை நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பணத்தட்டுப்பாடு காரணமாக போதிய சிகிச்சை பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

இருப்பினும், பல அரசாங்க முன்முயற்சிகளின் அறிமுகத்துடன் சுகாதார சூழல் மாறியுள்ளது. உதாரணமாக, ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்று அழைக்கப்படும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) போன்ற அரசாங்க ஆதரவு சுகாதார பாதுகாப்புத் திட்டங்கள், மருத்துவ அவசர காலங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகின்றன. 

எனவே, மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு சேவைகளை இழந்த இந்திய மக்கள்தொகையில் 40% பேருக்கு இது எவ்வாறு பயனளிக்கிறது? (1)

மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) உடன் தொடர்புடைய அம்சங்கள் மற்றும் நன்மைகள் யாவை?

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 50%-க்கும் அதிகமானோர் நிதி பற்றாக்குறை காரணமாக சரியான சிகிச்சையை இழந்துள்ளனர். பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) திட்டமானது அவர்கள் முறையான சுகாதார சேவைகளைப் பெறவும், அதிகப்படியான மருத்துவ செலவுகளைத் தடுக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறுதியில் நடுத்தர வர்க்க மக்களுக்கு வறுமையைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் ஆதரிக்கிறது.

எனவே, இந்த அரசாங்க ஆதரவு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சில நன்மைகள் இங்கே:

  • இத்பிளானின் கீழ் பயன்பெறும் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.5 இலட்சம் உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். 
  • அறை கட்டணம், மருத்துவரின் கட்டணம், நோயறிதல் சேவைகள், சிகிச்சை செலவு, ஐ.சி.யூ (ICU) மற்றும் ஆபரேஷன் தியேட்டர் செலவுகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 1393 நடைமுறைகளுக்கு இந்த பிளான் கவரேஜை வழங்குகிறது. 
  • இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் மருத்துவ வசதிகளை பயனாளிகள் கோரலாம்.
  • இந்த பிளானின் கீழ், நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முந்தைய கவரேஜையும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 15 நாட்களுக்கு பிறகான கவரேஜையும் பெறுவீர்கள். அந்த நேரத்தில், நோயாளி மருந்துகள் மற்றும் நோயறிதலுக்கான முழுமையான கவரேஜையும் பெறுவார். 

இந்தத் பிளானின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, இது யாரையும் அவர்களின் பாலினம், வயது அல்லது குடும்ப அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நன்மைகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்தாது. இருப்பினும், மருத்துவமனையில் ஆயுஷ்மான் பாரத் நன்மைகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுக்கு யார் தகுதியானவர்கள்?

சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு இந்த நன்மைகளை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதால் தகுதி அளவுகோல்கள் சற்று கடுமையானவை. எனவே, இந்த தேசிய சுகாதாரப் பாதுகாப்பு பாலிசியின் பின்வரும் தகுதி அளவுருக்களைப் படித்து, அதன் நன்மைகளைப் பெற நீங்கள் தகுதியுள்ளவரா என்பதைப் பாருங்கள்:

பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பிளானின் கீழ் சுகாதார கவரேஜை பெறுபவர்கள் பின்வருமாறு:

நகர்ப்புறங்களில்:

அரசாங்கம் 11 தொழில் பிரிவுகளைக் கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த பிரிவுகளின் ஒரு பகுதியாக இருப்பவர்கள் மட்டுமே ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுக்கு தகுதி பெறுவார்கள். 

  • எலக்ட்ரீஷியன்/ பழுதுபார்க்கும் பணியாளர்/ மெக்கானிக் 
  • கட்டுமானத் தொழிலாளி/பாதுகாவலர்/பிளம்பர்/ பெயிண்டர்/ மேலும் இதுபோன்றவர்கள்.
  • வாஷர்மேன்/சௌகிதார்
  • குப்பை எடுப்பவர்கள்
  • பிச்சைக்காரர் 
  • வீட்டு வேலை செய்பவர்
  • ஓட்டுநர்/ போக்குவரத்துத் துறை தொழிலாளி/ நடத்துனர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய பிற நபர்கள் 
  • தெருக்களில் பணிபுரியும் செருப்பு வியாபாரி/தெரு வியாபாரி/காவலர்/ பிற சேவை வழங்குநர்கள்
  • வீடு சார்ந்த தொழிலாளி/தையல்காரர்/கைவினை கலைஞர்
  • விநியோக உதவியாளர்/கடை பணியாளர்

கிராமப்புறங்களில்:

  • எஸ்.சி/எஸ்.சி (SC/ST) குடும்பங்கள்
  • உடல் ஊனமுற்ற உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் (குறைந்தது ஒன்று)
  • 16 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்ட வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத பெண் தலைமையிலான குடும்பம்
  • சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் 
  • நிலமற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது அவர்களின் ஒரே வருமான ஆதாரம் தினக்கூலியாக இருக்கும். 
  • கூரை வீட்டிலும், ஒரே ஒரு அறை கொண்ட வீடுகளிலும் வசிக்கும் மக்கள்

ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுக்கான ஆன்லைன் பதிவு நடைமுறை என்ன?

எஸ்.இ.சி.சி (SECC) 2011 தரவுகளால் ஏற்கனவே ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனாவின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்து பெறுநர்களும் அடையாளம் காணப்பட்டதால், ஆயுஷ்மான் பாரத் பதிவுக்கு தனி செயல்முறை எதுவும் இல்லை. தகுதி அளவுருக்களை சரிபார்ப்பதைத் தவிர, பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) வலைத்தளத்தைப் பயன்படுத்தி பிளானிற்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை நேரடியாக சரிபார்க்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது இங்கே: 

படி 1: பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY)-இன் ஆன்லைன் போர்ட்டலுக்குச் சென்று, ‘நான் தகுதியுடையவரா’ என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.

படி 2: ஒரு முறை கடவுச்சொல்லை உருவாக்க உங்கள் தொடர்பு விவரங்களைக் கேட்கும். 

படி 3: இந்த விவரங்கள் அனைத்தையும் வழங்கிய பிறகு, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY)-இன் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரைக் கண்டறிந்து, அந்த மருத்துவப் பலன்கள் கிடைக்குமா என்பதைச் சரிபார்க்க, ரேஷன் எண்/மொபைல் எண்/பெயர்/எச்.எச்.டி (HHD) எண் போன்றவற்றின் மூலம் தேடவும்.

விண்ணப்பிக்கும்போது நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து ஆவணங்கள் என்னென்ன?

ஆயுஷ்மான் பாரத் அட்டையின் அனைத்து முக்கிய நன்மைகளையும் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது பற்றி நீங்கள் நினைத்தால், இந்த ஆவணங்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்:

  • சாதிச் சான்றிதழ் 
  • வயது மற்றும் அடையாளச் சான்றாக பான் மற்றும் ஆதார் அட்டை
  • வருமானச் சான்றிதழ் (அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை)
  • குடும்பத்தின் தற்போதைய நிலை (ஜாயிண்ட்/நியூக்ளியர்) மற்றும் அதற்கான ஆதார ஆவணம்

ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அட்டையை எவ்வாறு பெறுவது?

பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பிளானின் கீழ் காகிதமில்லா, கேஷ்லெஸ் மற்றும் கையடக்க பரிவர்த்தனைகளின் வசதியைப் பெற பயனாளிகள் ஆயுஷ்மான் பாரத் யோஜனா கோல்டன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். விரைவான மற்றும் தொந்தரவில்லாத சேவையைப் பெற, நீங்கள் மருத்துவமனையில் அட்டையை வழங்கலாம். 

அட்டையைப் பெறுவதற்கான செயல்முறை இங்கே:

படி 1: பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY)-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று உள்நுழைய உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தவும்.

படி 2: கேப்சா குறியீட்டை உள்ளிட்டு ஓ.டி.பி (OTP)-ஐ உருவாக்கி, எச்.எச்.டி (HHD) கோடை தேடவும்.

படி 3: அதன் பிறகு, நீங்கள் சி.எஸ்.சி (CSC) அல்லது பொது சேவை மையத்திற்கு எச்.எச்.டி (HHD) கோடை வழங்க வேண்டும், அங்கு ஆயுஷ்மான் மித்ரா அல்லது சி.எஸ்.சி (CSC) பிரதிநிதிகள் இந்த செயல்முறையை முடிக்க உங்களுக்கு உதவுவார்கள். 

மேலும், அட்டையைப் பெறுவதற்கும், அனைத்து ஆயுஷ்மான் அட்டைப் பலன்களைப் பயன்படுத்துவதற்கும் நீங்கள் ரூ.30 செலுத்த வேண்டும்.

பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்க்கலாம்?

பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதைச் சரிபார்க்க நீங்கள் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தலாம். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் பிளானிற்குத் தகுதியுள்ளவரா இல்லையா என்பதைச் சரிபார்க்க ஆன்லைன் போர்ட்டலைப் பயன்படுத்தலாம். ஆன்லைன் செயல்முறையைத் தவிர, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய இரண்டு வசதியான முறைகள் உள்ளன:

  • பொதுச் சேவை மையம் (CSC): சுகாதாரப் பாதுகாப்புத் பிளானிற்கான உங்கள் தகுதியைத் தீர்மானிக்க அருகிலுள்ள சி.எஸ்.சி (CSC) அல்லது ஏதேனும் எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனையைக் கண்டறியவும். 
  • உதவி மைய எண்கள்: தேவையான அனைத்து தகவல்களையும் பெற 1800-111-565 அல்லது 14555 என்ற உதவி மைய எண்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY)-இன் கீழ் என்னென்ன வியாதிகள் காப்பீடு செய்யப்படும்?

ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ் உள்ள நோய்களின் பட்டியல் இங்கே:

  • கரோனரி ஆர்டெரி பைபாஸ் கிராஃப்டிங் 
  • ஸ்கல் பேஸ் சர்ஜரி 
  • ஆன்டெரியர் ஸ்பைன் ஃபிக்ஸேஷன் 
  • டபுள் வால்வ் ரிபிளேஸ்மென்ட் 
  • புரோஸ்டேட் கேன்சர்
  • நுரையீரல் வால்வு ரீபிளேஸ்மென்ட் 
  • லாரிங்கோபாரிஞ்ஜெக்டோமி வித் கேஸ்ட்ரிக் புல்-அப் 
  • ஸ்டென்ட் உடன் கரோடிட் ஆஞ்சியோபிளாஸ்டி 
  • தீக்காயங்களைத் தொடர்ந்து சிதைவுக்கான திசு எக்ஸ்பாண்டர் 

இப்போது, இந்த பிளானின் கீழ் பயனாளிகள் கோவிட்-19 பரிசோதனை மற்றும் சிகிச்சையையும் இலவசமாகப் பெறலாம்.

இந்தத் பிளான் மிகவும் ஆபத்தான நோய்களுக்கான நிதிக் காப்பீட்டை நீட்டிக்கும் அதே வேளையில், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விலக்குகளும் உள்ளன. உதாரணமாக:

  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 
  • ஓ.பி.டி (OPD)
  • தனிப்பட்ட நோயறிதல் 
  • காஸ்மெடிக் தொடர்பான நடைமுறைகள் 
  • போதைப்பொருள் மறுவாழ்வு பிளான் 
  • கருவுறுதல் தொடர்பான நடைமுறைகள்

பிரீமியம் செலவின்றி தேவையான அனைத்து வசதிகள் மற்றும் பண கவரேஜுடன், ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது குடிமக்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். ஏற்கனவே இருக்கும் நோய்கள் முதல் கடுமையான மருத்துவ பிரச்சனைகள் வரை, இப்போது பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பிளானின் கீழ் நீங்கள் அனைத்தையும் சமாளிக்க முடியும்.

PMJAY பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பிளான் 80 வயது முதியவர்களுக்கு கவரேஜ் அளிக்கிறதா?

ஆம். இந்தத் பிளானிற்கு குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் இல்லை என்பதால், 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆயுஷ்மான் யோஜனாவில் பதிவுசெய்து இந்தத் திட்டத்தில் பயனடையலாம்.

மருத்துவ அவசர காலங்களில் பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பயனாளி யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பிரதிநிதிகள் அல்லது ஆயுஷ்மான் மித்ரா எப்போதும் எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனையில் இருப்பார்கள். மேலும் பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பிளானின் கீழ் மருத்துவ வசதிகளைப் பெற பயனாளிகள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆயுஷ்மான் பாரத் பிளான் கர்ப்பிணிகளுக்கு கிடைக்குமா?

பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா பிளானின் கீழ், கர்ப்பிணிகள் ரூ.5 லட்சம் வரை நிதிக் காப்பீடு பெறலாம்.

நான் ஆயுஷ்மான் யோஜனா அட்டை வைத்திருந்தால் டெத் பெனிஃபிட்ஸை பெற முடியுமா?

இல்லை, பி.எம்.ஜே.ஏ.ஒய் (PMJAY) பிளான் பாலிசிதாரர்களின் பயனாளிகளுக்கு டெத் பெனிஃபிட்ஸை வழங்காது.